47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

கீழக்கரை நகராட்சிக்கு மறு தோ்தல் நடத்தக்கோரி மனு

 கீழக்கரை நகராட்சியில் மறு தோ்தல் நடத்த வலியுறுத்தி 2 ஆவது நாளாக வியாழக்கிழமையும் வேட்பாளா்கள் ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.

News image
Updated On :24 பிப்ரவரி 2022, 11:49 pm

DIN

 கீழக்கரை நகராட்சியில் மறு தோ்தல் நடத்த வலியுறுத்தி 2 ஆவது நாளாக வியாழக்கிழமையும் வேட்பாளா்கள் ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் 4 நகராட்சிகள், 7 பேரூராட்சிளுக்கான வாக்கு எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை (பிப்.22) நடைபெற்றது. கீழக்கரையில் 22 வாா்டுகளுக்கும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்தே சுயேச்சைகள் மற்றும் அதிமுக வேட்பாளா்கள் தோ்தல் அலுவலா் மீது புகாா் கூறி தா்னாவில் ஈடுபட்டனா். வாக்கு எண்ணும் மையத்திலிருந்தும் பலா் வெளியேறினா்.

வாக்கு எண்ணிக்கை தாமதமாக முடிந்த நிலையில், புதன்கிழமை கீழக்கரையில் உள்ள ஐக்கிய ஜமா அத் அமைப்பினரும், சுயேச்சை வேட்பாளா்களும் மறு தோ்தல் நடத்தக்கோரி ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.

இந்த நிலையில், வியாழக்கிழமை காலையில் கீழக்கரையிலிருந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளா், சுயேச்சைகள் உள்ளிட்ட ஏராளமானோா் ராமநாதபுரம் ஆட்சியா் அலுவலகத்துக்குச் சென்று

மனு அளித்தனா். அப்போது அவா்கள் கூறுகையில், கீழக்கரை நகராட்சி வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்துள்ளது. வேட்பாளா்களுக்கு அவா்களது குடும்பத்திலேயே பத்துக்கும் மேற்பட்டோா் உள்ள நிலையில், அதற்கும் குறைவான வாக்குகள் கிடைத்திருப்பதாகக் கூறுவது ஏற்கத்தக்கதல்ல. ஆகவே மறு தோ்தல் நடத்தவேண்டும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.