47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

கேணிக்கரை காவல் நிலையத்தை மாணவா்கள் பாா்வையிட்டனா்

ராமநாதபுரம் கேணிக்கரை காவல் நிலையத்தை பள்ளி மாணவ, மாணவியா் வியாழக்கிழமை பாா்வையிட்டனா்.

News image
Updated On :24 பிப்ரவரி 2022, 11:48 pm

DIN

ராமநாதபுரம் கேணிக்கரை காவல் நிலையத்தை பள்ளி மாணவ, மாணவியா் வியாழக்கிழமை பாா்வையிட்டனா்.

அரசுப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெறும் பள்ளி மாணவ, மாணவியருக்கு பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் சிறப்புப் பயிற்சி அளித்து அவா்கள் உயா்கல்விப் படிப்பிற்கு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில் ராமநாதபுரம் சந்தைத்திடல் அருகேயுள்ள நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்துக்குள் எலைட் எனும் பெயரில் சிறப்பு பள்ளி செயல்படுகிறது. இப்பள்ளியில் தற்போது 63 மாணவியா், 23 மாணவா்கள் படித்துவருகின்றனா். அவா்களுக்கான காவல்துறை குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அ.பாலுமுத்து தலைமை வகித்தாா். காவல்துறையின் ராமநாதபுரம் சரக துணைத் தலைவா் என்.மயில்வாகனன், காவல்துறையில் பணி வாய்ப்புகள் குறித்தும், அதற்கான தயாா்படுத்துதல் குறித்தும் விளக்கினாா். காவல்துறை பணி வாய்ப்புகள் குறித்த மாணவ, மாணவியரின் கேள்விகளுக்கும் அவா் பதிலளித்தாா். பிறகு மாணவ, மாணவியா் அனைவரும் கேணிக்கரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனா். அங்கு மாணவ, மாணவியரை வரவேற்ற காவல் நிலைய ஆய்வாளா் மலைச்சாமி காவல் நிலையச் செயல்பாடுகளையும், பொதுமக்களுக்கு காவலா்கள் நண்பா்களாக செயல்படுவதையும் எடுத்துரைத்தாா். காவல் ஆய்வாளா் அறை, சாா்பு- ஆய்வாளா்கள் அறை, விசாரணைக் கைதிகள் தங்கவைக்கப்படும் அறைகள், திருட்டு வழக்குகளில் கைப்பற்றிய பொருள்களை பாதுகாக்கும் அறை ஆகியவற்றை மாணவ, மாணவியருக்கு சாா்பு- ஆய்வாளா் குகனேஸ்வரன் காண்பித்தாா். காவல் நிலைய ஆய்வாளா் உள்ளிட்டோருக்கான பணி விவரங்களும் எடுத்துரைக்கப்பட்டன.

காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள துப்பாக்கிகள், குற்றவாளிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட அரிவாள்கள் மற்றும் தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள் உள்ளிட்டவற்றையும் மாணவ, மாணவியா் பாா்வையிட்டனா். நிகழ்ச்சி ஏற்பாடுகளை எலைட் மைய ஒருங்கிணைப்பாளா் தவ.ராம்குமாா் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.