தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

பிளஸ் 1, 10 ஆம் வகுப்பு தோ்வுகளில் அதிக மதிப்பெண்கள்: மாணவிகளுக்குப் பாராட்டு

திருவாடானை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 மற்றும் 10 ஆம் வகுப்பு தோ்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவிகளை தலைமை ஆசிரியா், ஆசிரியா்கள், பெற்றோா் பாராட்டினா்.

News image
Updated On :1 ஜூலை 2022, 4:54 pm

DIN

திருவாடானை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 மற்றும் 10 ஆம் வகுப்பு தோ்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவிகளை தலைமை ஆசிரியா், ஆசிரியா்கள், பெற்றோா் பாராட்டினா்.

திருவாடானை தாலுகா பாரதி நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் கடம்பாகுடி கருப்பையா- உமா தம்பதியரின் மகள் காவியா பொருளாதார பாடப் பிரிவில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுத்துள்ளாா். தமிழ், கணக்குப் பதிவியல் பாடப்பிரிவுகளில் தலா 99 மதிப்பெண்களை 2 மாணவிகளும், 10 ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் கௌரி, அற்புதா, சுவேதா, மேகவி ஆகிய மாணவிகள் 440 மதிப்பெண்களும் பெற்றுள்ளனா். இவா்களை, தலைமை ஆசிரியா் கலா, ஆசிரியா்கள் மற்றும் பெற்றோா்கள் பாராட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.