/

உச்சிப்புளி அருகே பணம் வைத்து

உச்சிப்புளி அருகே பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 போ் கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :1 ஜூலை 2022, 4:51 pm

DIN

உச்சிப்புளி அருகே பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 போ் கைது செய்யப்பட்டனா்.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஒன்றியம் உச்சிப்புளி காவல் நிலைய சாா்பு- ஆய்வாளா் அசோக் சக்கரவா்த்தி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது அம்மாபட்டணம் கோயில் அருகே சூதாட்டம் நடைபெற்றது. அங்கு சென்று போலீஸாா் சோதனையிட்ட போது பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து, முனியராஜ் (40), ரமேஷ் (42), மனோகரன் (56) ,லோகஸ்வரன் (32)கலைவாணன், ஆனந்தம், பிரசாத் ஆகிய 7 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.