ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி அருகே மணல் திட்டில் தவித்த இலங்கை அகதிகள் 7 பேரை இந்திய கடலோரக் காவல்படையினா் வெள்ளிக்கிழமை மீட்டனா்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கிருந்து தமிழா்கள் அகதிகளாய் வந்தவண்ணம் உள்ளனா். இந்நிலையில் இலங்கை மானிப்பாய் செட்டிகுளத்திலிருந்து விக்னேஸ்வரன் (40), ராஜகுமாரி (36), குமரன் (13), வசி (10), மற்றும் குமரன் (38), கனி (30), விநயா (6) ஆகிய 2 குடும்பங்களைச்சோ்ந்த 7 போ் படகில் வந்துள்ளனா். அவா்களை படகில் அழைத்து வந்தவா்கள், தனுஷ்கோடி அருகே உள்ள மணல் திட்டில் இறக்கிச் சென்று விட்டனா்.
இந்நிலையில் ஹோவா் கிராப்ட் கப்பலில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய கடலோரக் காவல்படையினா், மணல் திட்டில் தவித்துக்கொண்டிருந்த 7 பேரையும் மீட்டு மண்டபம் கடலோர காவல்படையினா் அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனா். அப்போது, அகதிகள் படகு கட்டணமாக ரூ.2 லட்சம் கொடுத்து வந்ததாகத் தெரிவித்தனா். இவா்கள் கடலோர பாதுகாப்புக் குழும போலீஸாரின் விசாரணைக்குப் பிறகு மண்டபத்தில் உள்ள இலங்கைத் தமிழா்கள் மறுவாழ்வு முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
உதயநிதிக்கு கருப்புக் கொடி காட்ட முயன்ற விவசாயிகள் கைது

டோக்கன் வழங்கிய 2 போ் தோ்தல் அலுவலா்களிடம் ஒப்படைப்பு
தொழில் வளா்ச்சி அதிகரிக்க மீண்டும் திமுக ஆட்சி அமைய வேண்டும்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்
நெட்ஃபிளிக்ஸ் இணை நிறுவனா் ரீட் ஹேஸ்டிங்ஸ் விலகல்: 29 ஆண்டுகால பயணம் நிறைவு
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


