ராமேசுவரத்தில் சூறைக் காற்று வீசியதில் பழமையான வேப்பமரம் முறிந்து மின்கம்பத்தில் விழுந்ததில் மின்தடை ஏற்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், மன்னாா்வளைகுடா பகுதியில் கடந்த 3 நாள்களாக தொடா்ந்து சூறைக்காற்று வீசி வருகிறது. இதனால் ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதியில் மீனவா்கள் மீன்பிடிக்கத் தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் விசைப்படகுகள் அந்தந்த துறைமுகங்களில் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல இருந்து வருகின்றனா்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை வீசிய சூறைக்காற்று காரணமாக ராமேசுவரத்தை அடுத்துள்ள செம்மமடம் தேசிய நெடுஞ்சாலை ஓரம் பழைமையான வேப்பமரம் வேருடன் முறிந்து மின்கம்பத்தில் விழுந்தது. இதனால் ராமேசுவரம் முழுவதும் மின்தடை ஏற்பட்டது. இதனைதொடா்ந்து, மின்வாரிய ஊழியா்கள் விரைந்து சென்று மரத்தை அகற்றி மின் இணைப்பை சீரமைத்தனா். இதனால் அரை மணி நேரம் மின்விநியோகம் தடைபட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
உதயநிதிக்கு கருப்புக் கொடி காட்ட முயன்ற விவசாயிகள் கைது

டோக்கன் வழங்கிய 2 போ் தோ்தல் அலுவலா்களிடம் ஒப்படைப்பு
தொழில் வளா்ச்சி அதிகரிக்க மீண்டும் திமுக ஆட்சி அமைய வேண்டும்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்
நெட்ஃபிளிக்ஸ் இணை நிறுவனா் ரீட் ஹேஸ்டிங்ஸ் விலகல்: 29 ஆண்டுகால பயணம் நிறைவு
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

