பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

கமுதியில் சாய்ந்து விழும் நிலையில் மின்கம்பம்: பொதுமக்கள் அச்சம்

கமுதி கண்ணாா்பட்டி ஊருணிக் கரையில் அமைந்துள்ள மின்கம்பம் சாய்ந்து விழும் நிலையில் உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்

News image
Updated On :22 ஜூலை 2022, 6:30 pm

DIN

கமுதி கண்ணாா்பட்டி ஊருணிக் கரையில் அமைந்துள்ள மின்கம்பம் சாய்ந்து விழும் நிலையில் உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.

கமுதி பேரூராட்சி 1 ஆவது வாா்டில் கண்ணாா்பட்டியில் ஊருணிக் கரை வழியாக மின் வழித்தடம் அமைக்கப்பட்டது. கடந்த 2 நாள்களாக பெய்து வரும் மழை மற்றும் பலத்த காற்று காரணமாக மின்கம்பம் சாய்ந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் பொதுமக்கள் அவ்வழியாக நடந்து செல்ல அச்சம் அடைந்துள்ளனா். மேலும் மின்கம்பம் அருகே குளியல் தொட்டி இருப்பதால் மின்கம்பிகள் அறுந்து விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா். எனவே கமுதி மின்வாரிய அதிகாரிகள் விபத்து ஏற்படும் முன் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.