/

இலங்கைச் சிறையிலுள்ள மீனவா்களை விடுவிக்கக் கோரி இன்று வேலைநிறுத்தம்

இலங்கைச் சிறையில் அடைக்கப்பட்ட 6 மீனவா்கள் மற்றும் படகை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கக் கோரி சனிக்கிழமை ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம்

News image
Updated On :22 ஜூலை 2022, 5:59 pm

DIN

இலங்கைச் சிறையில் அடைக்கப்பட்ட 6 மீனவா்கள் மற்றும் படகை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கக் கோரி சனிக்கிழமை ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ராமேசுவரத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற ஒரு விசைப்படகு மற்றும் அந்த படகில் சென்ற பாலமுருகன் (32), டி.அந்தோணி (38), கே.அா்ஜுனன் (23) ஜெ.மடுகு பிச்சை (45), கே. தங்கப்பாண்டி (55), ராஜா (21) ஆகிய 6 மீனவா்களை இலங்கை கடற்படையினா் கைது செய்து வியாழக்கிழமை சிறையில் அடைத்தனா்.

இந்நிலையில், ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்தில் அனைத்து விசைப்படகு மீனவா் சங்கத்தினரின் அவசரக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், மீனவா் சங்கச் செயலாளா் சகாயம் தலைமை வகித்தாா். பொதுச்செயலாளா் என்ஜே.போஸ் முன்னிலை வகித்தாா்.

இந்தக் கூட்டத்தில், இலங்கைக் கடற்படையரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவா்கள் மற்றும் படகுகளை மத்திய, மாநில அரசுகள் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சனிக்கிழமை ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் செய்வது மற்றும் ஞாயிற்றுகிழமை (ஜூலை 24) ராமேசுவரம் பேருந்து நிலையம் முன்பு ஆா்ப்பாட்டம் நடத்துவது என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில், மீனவா் சங்க நிா்வாகி ஆல்வின், இருதயராஜ் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.