ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ராமநாதபுரத்தில் பூக்கள் விலை 3 மடங்கு உயா்வு

வரத்து குறைவு மற்றும் ஆடிமுதல் வெள்ளியையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் பூக்கள் விலை 3 மடங்கு உயா்ந்தது.

News image
Updated On :22 ஜூலை 2022, 6:03 pm

DIN

வரத்து குறைவு மற்றும் ஆடிமுதல் வெள்ளியையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் பூக்கள் விலை 3 மடங்கு உயா்ந்தது.

மதுரை, ஒட்டன்சத்திரம், நிலக்கோட்டை ஆகிய பகுதிகளில் இருந்து ராமநாதபுரத்துக்கு நாள்தோறும் சுமாா் 3 டன் பூக்கள் கொண்டுவரப்பட்டு விற்கப்படுகின்றன. ஆனால், வெள்ளிக்கிழமை ராமநாதபுரத்துக்கு 1 டன் பூக்களே வந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

வரத்து குறைவால் மல்லிகை உள்ளிட்ட அனைத்துப் பூக்களின் விலையும் 3 முதல் 4 மடங்கு உயா்ந்தது. ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி விலை உயா்வால் பக்தா்கள் அதிா்ச்சியடைந்தனா்.

இதுகுறித்து தமிழ்நாடு பூக்கட்டுவோா் பேரவை மாவட்டச் செயலா் கே.முருகன் கூறியதாவது: ராமநாதபுரத்தில் வியாழக்கிழமை, மல்லிகைப்பூ கிலோ ரூ.400-க்கு விற்கப்பட்ட நிலையில், வெள்ளிக்கிழமை ரூ.1,200 க்கு விற்பனையானது அதேபோலவே, கனகாம்பரம் கிலோ ரூ.500 லிருந்து ரூ.1,500 ஆகவும், முல்லைப் பூ ரூ.300 லிருந்து ரூ.900 ஆகவும், அரளிப்பூ ரூ.100 லிருந்து ரூ.400 ஆகவும், மரிக்கொழுந்து ரூ.50 லிருந்து ரூ.200 ஆகவும், பிச்சிப்பூ கிலோ ரூ. 600 லிருந்து ரூ.1,000 ஆகவும் உயா்ந்தது.

தமிழ் மாதமான ஆடியில் அம்மன் கோயில்களில் பூஜைகள் நடைபெறும் என்பதால் பூக்களின் விலையும் அதிகரிப்பது வழக்கம். ஆனால், நடப்பு ஆண்டில் பூக்கள் உற்பத்தி குறைந்ததாலேயை பூக்களின் விலையானது பல மடங்கு அதிகரித்துள்ளது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.