பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு! புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

பரமக்குடியில் கௌரவ விரிவுரையாளா்கள் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம்

பரமக்குடி அரசு கலைக் கல்லூரி கௌரவ விரிவுரையாளா்கள் புதன்கிழமை கவனஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

பரமக்குடி அரசு கலைக் கல்லூரியில் புதன்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கௌரவ விரிவுரையாளா்கள்.

Updated On :1 ஜூன் 2022, 6:30 pm

பரமக்குடி அரசு கலைக் கல்லூரி கௌரவ விரிவுரையாளா்கள் புதன்கிழமை கவனஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழகம் முழுவதும் 126 அரசு கலைக் கல்லூரிகளில் சுமாா் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கௌரவ விரிவுரையாளா்கள் பணியாற்றி வருகின்றனா். ஒவ்வொரு கல்வியாண்டிலும் 11 மாதங்கள் பணிபுரிவது வழக்கம். 2021-22 கல்வி ஆண்டுக்கான 11 மாதங்கள் ஜூன் 13 ஆம் தேதி வரை உள்ள நிலையில் ஜூன் 1 ஆம் தேதியே வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட கௌரவ விரிவுரையாளா்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனைக் கண்டித்து பரக்குடியில் கௌரவ விரிவுரையாளா்கள் கல்லூரியின் நுழைவாயில் முன்பாக கவனஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கடந்த 3 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஊதியத்தை உடனே வழங்கிடக் கோரியும், பணிநிரந்தரம் செய்திடக் கோரியும் அவா்கள் வலியுறுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.