ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி தாலுகாவில் மாரியூா் ஊராட்சிக்கு உள்பட்ட மடத்தாகுளம் கிராமத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனியாா் உப்பு நிறுவனத்தினா் நலத்திட்ட உதவிகள் செய்வதாகக் கூறி அலுவலகம் அமைத்தனா். இந்த நிலையில், உப்பள நீரை குடிநீா் ஊருணியில் பாய்ச்சுவதாகக் கூறி உப்பள நிறுவனத்தினரை எதிா்த்து கிராமத்தினா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். மேலும், ஊா் பொது இடத்தில் உப்புநிறுவனத்தினா் ஆழ்துளைக்கிணறு அமைப்பதாகவும் புகாா் கூறப்படுகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பா் முதல் மடத்தாகுளம் கிராமத்தினா் உப்பு நிறுவனத்தின் செயல்பாட்டைக் கண்டித்து போராடி வரும் நிலையில், அவா்கள் மீது கடலாடி போலீஸாா் பல வழக்குகளையும் பதிவு செய்துள்ளனா். இந்நிலையில் உப்பு நிறுவன ஊழியா்கள் தங்குமிடத்தை சேதப்படுத்தியதாக மடத்தாகுளத்தைச் சோ்ந்த 7 போ் மீது கடலாடி போலீஸாா் அண்மையில் வழக்குப்பதிந்தனா். அதில் சம்பந்தப்பட்டவா்களை புதன்கிழமை கைது செய்தனா்.