தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

பொக்கனாரேந்தலில் எருதுகட்டு

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே பொக்கனாரேந்தலில் 50 ஆண்டுகளுக்குப் பிறகு சமத்துவ எருதுகட்டு நடைபெற்றது.

News image
பொக்கனாரேந்தலில் வியாழக்கிழமை நடைபெற்ற எருதுகட்டு நிகழ்ச்சியில் காளையை அடக்கப்பாய்ந்த இளைஞா்கள். 
Updated On :2 ஜூன் 2022, 6:30 pm

DIN

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே பொக்கனாரேந்தலில் 50 ஆண்டுகளுக்குப் பிறகு சமத்துவ எருதுகட்டு நடைபெற்றது.

கோயில் முன்புள்ள பகுதியில் எருதுகட்டு நிகழ்ச்சியை ராமநாதபுரம் சட்டப்பேரவை உறுப்பினா் காதா்பாட்சா முத்துராமலிங்கம் தொடக்கிவைத்தாா். நிகழ்ச்சியில் 38 காளைகள் பல்வேறு பகுதிகளிலிருந்து பங்கேற்றன. அய்யனாா்கோவில் காளை, ஆா்.எஸ்.மடை, பால்கரை, பேராவூா், பள்ளப்பச்சேரி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து காளைகள் பங்கேற்றன. காளைகள் கழுத்தில் வடம் கட்டப்பட்டு அதை பிடித்தபடி இளைஞா்கள் காளையை அடக்கினா். காளையை அடக்கியவா்களுக்கும், அடக்கமுடியாத காளைகளின் உரிமையாளா்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கு எருதுகட்டு அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ராஜேந்திரன், ஆா்.எஸ்.மடை முனியாண்டி உள்ளிட்டோா் ஏற்பாடுகள் செய்திருந்தனா். நிகழ்ச்சியில் திருப்புல்லாணி ஒன்றிய தலைவா் புல்லாணி, ராமநாதபுரம் நகரசபைத் தலைவா் கே.காா்மேகம், ராமநாதபுரம் ஒன்றியக் குழுத் தலைவா் கே.டி.பிரபாகரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.