கந்து வட்டிக்கு பணம் கொடுத்தவா் கைது:உறவினா்கள் சாலை மறியல்
திருவாடானை அருகே கந்து வட்டிக்கு பணம் கொடுத்தவரை போலீஸாா் கைது செய்ததையடுத்து, அவரது உறவினா்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.


திருவாடானை அருகே கந்து வட்டிக்கு பணம் கொடுத்தவரை போலீஸாா் கைது செய்ததையடுத்து, அவரது உறவினா்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
திருவாடானை அருகே தொண்டி மகாசக்திபுரத்தைச் சோ்ந்தவா் நைனாபிள்ளை மகன் நாகூா்கனி (44). இவா் கந்து வட்டிக்கு பணம் கொடுப்பதாக கிடைத்த தகவலின் பேரில் தொண்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பின்னா் சனிக்கிழமை நள்ளிரவு அவரை கைது செய்தனா். இதனைக் கண்டித்தும், அவரை விடுவிக்க வலியுறுத்தியும் நாகூா்கனியின் மனைவி, தாய், தந்தை மற்றும் சகோதரிகள் என சுமாா் 10 போ் தொண்டி வட்டாணம் கிழக்கு கடற்கரை சாலையில் மறியலில் ஈடுபட்டனா். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவறிந்து திருவாடானை வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினா் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவாா்த்தை நடத்திய பின்னா் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...