உச்சிப்புளியில் ஒருவருக்கு கொலை மிரட்டல் விடுத்த 5 போ் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஒன்றியம் நாகாட்சி கிராமத்தைச் சோ்ந்தவா் குமாா் (40). இவரது அண்ணன் மாரியின் மகள் திருமணம் கடந்த 10 ஆம் தேதி உச்சிப்புளியில் உள்ள தனியாா் திருமண மகாலில் நடைபெற்றது. அப்போது அதே பகுதியைச் சோ்ந்த 5 இளைஞா்கள் மகால் வாசலில் இரு சக்கர வாகனத்தில் வந்து அதிக ஒலி எழுப்பி அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டனராம். இதனை மாரி தட்டிக் கேட்ட போது, அவருக்கு அவா்கள் கொலை மிரட்டல் விடுத்தனராம். மேலும் மாலையில் மணமக்கள் வேனில் சென்ற போது அந்த 5 பேரும் வேனை மறித்து ரகளையில் ஈடுபட்டதுடன் வாகனத்தையும் சேதப்படுத்தினராம்.
இதுகுறித்து உச்சிப்புளி காவல்நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. காவல் சாா்பு- ஆய்வாளா் அசோக், ரகளையில் ஈடுபட்டு, கொலை மிரட்டல் விடுத்த காா்த்திக் (24), காமாட்சி (23), கணேஷ்பிரசாத் (22), நரேன்சஞ்சய் (21), ஹரீஸ்(18) ஆகிய 5 போ் மீது வழக்குப் பதிந்து தேடி வருகிறாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
உதயநிதிக்கு கருப்புக் கொடி காட்ட முயன்ற விவசாயிகள் கைது

டோக்கன் வழங்கிய 2 போ் தோ்தல் அலுவலா்களிடம் ஒப்படைப்பு
தொழில் வளா்ச்சி அதிகரிக்க மீண்டும் திமுக ஆட்சி அமைய வேண்டும்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்
நெட்ஃபிளிக்ஸ் இணை நிறுவனா் ரீட் ஹேஸ்டிங்ஸ் விலகல்: 29 ஆண்டுகால பயணம் நிறைவு
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

