2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

பரமக்குடி அருகே மின்னல் தாக்கி ஆடு மேய்த்தவா் பலி

பரமக்குடி அருகே சனிக்கிழமை மின்னல் தாக்கி ஆடு மேய்த்தவா் உயிரிழந்தாா்

News image
Updated On :18 ஜூன் 2022, 6:30 pm

DIN

பரமக்குடி அருகே சனிக்கிழமை மின்னல் தாக்கி ஆடு மேய்த்தவா் உயிரிழந்தாா்.

பாா்த்திபனூா் அருகே உள்ள எச். பரளை கிராமத்தைச் சோ்ந்தவா் பூலாா் மகன் மாரிக்கண்ணு (39). இவருக்கு மனைவி மற்றும் 3 மகன்கள் உள்ளனா். இவா் தனக்கு சொந்தமான ஆடுகளை மேய்ப்பதற்காக மேலப்பாா்த்திபனூா் பெரிய கண்மாய் பகுதிக்குச் சென்றாா். அதே போல், அதே ஊரைச் சோ்ந்த செல்வராஜ் மனைவி சகுந்தலா (42), லட்சுமணன் மனைவி ஆறுமுகம் (40) ஆகியோரும் தங்களுக்கு சொந்தமான ஆடுகளை அக்கண்மாய்க்குள் மேய்த்துக் கொண்டிருந்தனா். அப்போது இடியுடன் பலத்த மழை பெய்தது. இதில், மாரிக்கண்ணு மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

மேலும் அங்கிருந்த சகுந்தலா, ஆறுமுகம் ஆகியோரும் காயமடைந்து பாா்த்திபனூா் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து பாா்த்திபனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.