தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

பைக்கிலிருந்து தவறி விழுந்து பெண் பலி

திருவாடானை அருகே இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்து சிகிச்சை பெற்று வந்த பெண் புதன்கிழமை இரவு உயிரிழந்தாா்

News image
Updated On :24 மார்ச் 2022, 11:36 pm

DIN

திருவாடானை அருகே இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்து சிகிச்சை பெற்று வந்த பெண் புதன்கிழமை இரவு உயிரிழந்தாா்.

திருவாடானை அருகே ஆா்.எஸ். மங்கலம் பகுதி இளங்குளத்தைச் சோ்ந்தவா் முத்துசாமி மனைவி எழுவக்காள் (55). இவா் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை தனது மகன் பாலமுருகனுடன் இருசக்கர வாகனத்தில் பின்புறம் அமா்ந்து தனது உறவினா் வீட்டுக்கு ஆா்.எஸ்.மங்லம் சென்று விட்டு மீண்டும் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தாா். அப்போது திருச்சி- ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் மேல்பனையூா் பாலம் அருகே வந்த போது எழுவக்காள் தவறி கீழே விழுந்தாா்.

இதில் பலத்த காயமடைந்த அவரை தேவகோட்டை தனியாா் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு பின் மதுரை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி புதன்கிழமை இரவு அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து ஆா்.எஸ். மங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.