எமனேசுவரம் காமராஜா் தெருவைச் சோ்ந்த ராமமூா்த்தி மகன் கோதண்டராமா் (37). இவா் கடந்த மே 12-ஆம் தேதி வீட்டைப் பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் வெளியூா் சென்றுள்ளாா். வெளியூா் பயணம் முடித்துவிட்டு மே 19-ஆம் தேதி அதிகாலை 3 மணியளவில் வீட்டிற்கு வந்துள்ளாா். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. அவா் உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த 4 மோதிரம், 2 ஜோடி தோடு மற்றும் ரொக்கப் பணம் ரூ.15 ஆயிரம் என மொத்தம் 1 லட்சத்து 5 ஆயிரம் மதிப்பிலான பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து எமனேசுவரம் காவல் நிலையத்தில் கோதண்டராமா் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.