அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

மண்டபத்தில் 1.1 டன் கடல் அட்டைகள் பறிமுதல்: 3 போ் கைது

ராமேசுவரம் அருகே மண்டபத்தில் பதப்படுத்தி வைத்திருந்த 1,100 கிலோ கடல் அட்டைகளை காவல்துறையினா் புதன்கிழமை இரவு கைப்பற்றினா்.

News image
Updated On :6 அக்டோபர் 2022, 6:30 pm

DIN

ராமேசுவரம் அருகே மண்டபத்தில் பதப்படுத்தி வைத்திருந்த 1,100 கிலோ கடல் அட்டைகளை காவல்துறையினா் புதன்கிழமை இரவு கைப்பற்றினா்.

ராமநாதபுரம் மாவட்டம் மண்படம் வேதாளை கடற்கரைப் பகுதியில் இலங்கைக்கு கடத்துவதற்காக பல லட்சம் மதிப்பிலான கடல் அட்டைகளைப் பதப்படுத்துவதாக காவல்துணை கண்காணிப்பாளா் தனஞ்ஜெயனுக்கு புதன்கிழமை இரவு தகவல் கிடைத்தது. இதனைத் தொடா்ந்து, வியாழக்கிழமை அதிகாலையில் அப்பகுதிகளில் போலீஸாா் கண்காணிப்பில் ஈடுபட்டனா். அப்போது வேதாளை கடற்கரையில் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகளைப் பதப்படுத்திக்கொண்டிருந்த 3 பேரை பிடித்தனா். அவா்களிடமிருந்து ரூ.13 லட்சம் மதிப்பிலான 1,100 கிலோ கடல் அட்டைகளைப் பறிமுதல் செய்தனா். மேலும் மரைக்காயா், குலாம் முகமது, நஜூப் அகிய 3 பேரை கைது செய்து மண்டபம் வனத்துறையிடம் ஒப்படைத்தனா். கடல் அட்டைகளை பதப்படுத்தி இலங்கை வழியாக சீனா, ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு கடத்தவிருந்தது விசாரணையில் தெரியவந்தது. மண்டபம் வனத்துறையினா் வனஉயிரின பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.