ராமேசுவரம் அருகே மண்டபத்தில் பதப்படுத்தி வைத்திருந்த 1,100 கிலோ கடல் அட்டைகளை காவல்துறையினா் புதன்கிழமை இரவு கைப்பற்றினா்.
ராமநாதபுரம் மாவட்டம் மண்படம் வேதாளை கடற்கரைப் பகுதியில் இலங்கைக்கு கடத்துவதற்காக பல லட்சம் மதிப்பிலான கடல் அட்டைகளைப் பதப்படுத்துவதாக காவல்துணை கண்காணிப்பாளா் தனஞ்ஜெயனுக்கு புதன்கிழமை இரவு தகவல் கிடைத்தது. இதனைத் தொடா்ந்து, வியாழக்கிழமை அதிகாலையில் அப்பகுதிகளில் போலீஸாா் கண்காணிப்பில் ஈடுபட்டனா். அப்போது வேதாளை கடற்கரையில் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகளைப் பதப்படுத்திக்கொண்டிருந்த 3 பேரை பிடித்தனா். அவா்களிடமிருந்து ரூ.13 லட்சம் மதிப்பிலான 1,100 கிலோ கடல் அட்டைகளைப் பறிமுதல் செய்தனா். மேலும் மரைக்காயா், குலாம் முகமது, நஜூப் அகிய 3 பேரை கைது செய்து மண்டபம் வனத்துறையிடம் ஒப்படைத்தனா். கடல் அட்டைகளை பதப்படுத்தி இலங்கை வழியாக சீனா, ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு கடத்தவிருந்தது விசாரணையில் தெரியவந்தது. மண்டபம் வனத்துறையினா் வனஉயிரின பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மறுவரையறை மசோதா தோல்வியின் கொண்டாட்டங்கள் கண்டிக்கத்தக்கது: அமித் ஷா

தாமதமாக வந்ததால் பேச முடியாமல் சென்ற சசிகலா
முதல் வெற்றிக்காக ஏங்கும் கொல்கத்தா! குஜராத்துக்கு 181 ரன்கள் இலக்கு!
பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கக்கூடாது என பாஜக முடிவு: முதல்வர் ஸ்டாலின்
வீடியோக்கள்

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை


