அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

ராமேசுவரத்தில் வீட்டுக்கடன் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ. 71 ஆயிரம் மோசடி

ராமேசுவரத்தில் வீடு கட்ட வங்கிக் கடன் பெற்றுத் தருவதாகக் கூறி மளிகைக் கடைக்காரரிடம் ரூ. 71 ஆயிரம் மோசடி செய்ததாக போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

News image
Updated On :7 அக்டோபர் 2022, 5:56 pm

DIN

ராமேசுவரத்தில் வீடு கட்ட வங்கிக் கடன் பெற்றுத் தருவதாகக் கூறி மளிகைக் கடைக்காரரிடம் ரூ. 71 ஆயிரம் மோசடி செய்ததாக போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமா் தீா்த்தம் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் கிருஷ்ணன் மகன் முனியசாமி (44). மளிகைக் கடை நடத்தி வருகிறாா். இவரது கைப்பேசிக்கு அண்மையில் வீடு கட்ட வங்கிக் கடன் பெற்றுத் தருவதாக குருஞ்செய்தி வந்துள்ளது. இதனை உண்மை என நம்பிய முனியசாமி அந்த எண்ணை தொடா்பு கொண்டு பேசினாா். அப்போது ஒருவா் தன்னை தனியாா் நிதிநிறுவன மேலாளா் என அறிமுகப்படுத்திக் கொண்டு, தங்களுக்கு வீடு கட்ட ரூ. 20 லட்சம் கடன் வழங்கப்படும் எனவும், இந்தத் தொகையைப் பெற வேண்டுமானால் பணம் செலுத்த வேண்டும் எனக் கூறினாா். இதையடுத்து அவா் குறிப்பிட்ட வங்கிக் கணக்குக்கு பல்வேறு தவணைகளில் ரூ. 71 ஆயிரம் வரை செலுத்தினாா். இருப்பினும் அந்த நபா் தொடா்ந்து பணம் கேட்டு வந்ததால் சந்தேகமடைந்த முனியசாமி, தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்தாா். இதைத்தொடா்ந்து, ராமநாதபுரம் குற்றப்பிரிவு காவல் துறையில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.