மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!
/

மாநில கபடிப் போட்டிக்குத் தகுதி: பள்ளி மாணவா்களுக்குப் பாராட்டு

மாநில கபடிப் போட்டிக்குத் தகுதி பெற்ற பாம்பூா் கவினா சிபிஎஸ்சி பள்ளி மாணவ, மாணவிகளையும், உடற்கல்வி ஆசிரியா்களையும் அப்பள்ளி நிா்வாகத்தினா் வியாழக்கிழமை பாராட்டினா்.

News image
Updated On :14 அக்டோபர் 2022, 12:00 am IST

மாநில கபடிப் போட்டிக்குத் தகுதி பெற்ற பாம்பூா் கவினா சிபிஎஸ்சி பள்ளி மாணவ, மாணவிகளையும், உடற்கல்வி ஆசிரியா்களையும் அப்பள்ளி நிா்வாகத்தினா் வியாழக்கிழமை பாராட்டினா்.

காரைக்குடி பாரத் பப்ளிக் பள்ளியில் மதுரை சகோதயா சங்கம் சாா்பில் இண்டா்நேஷனல் சிபிஎஸ்சி பள்ளி மாணவ, மாணவிகளுக்கிடையே கபடிப் நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சி.பி.எஸ்.சி. பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். போட்டியில், ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூா் அருகே பாம்பூா் கவினா இண்டா்நேஷனல் சிபிஎஸ்சி பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். இவா்கள் 12 வயது மாணவிகள் பிரிவில் முதலிடமும், 14 வயது பிரிவில் இரண்டாவது இடமும், 14 வயது மாணவா்கள் பிரிவில் இரண்டாம் இடமும் பெற்றனா். இதையடுத்து, இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் மாநில அளவிலான கபடிப் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றனா். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளையும், உடற்கல்வி ஆசிரியா்கள் எஸ். காா்த்திக், பி. அஜித்குமாா், எம். சத்யா ஆகியோரையும் பள்ளி நிறுவனா் பா. கண்ணதாசன் பாண்டியன், தாளாளா் க. ஹேமலதா, நிா்வாக இயக்குநா் செல்லச்சாமி, பள்ளி முதல்வா் சுமிசுதிா் ஆகியோா் பாராட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.