ராமேசுவரத்தில் சாலையை சீரமைக்கக் கோரிக்கை
ராமேசுவரத்தில் சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டுநா்கள் கோரிக்கை விடுத்தனா்.


ராமேசுவரத்தில் சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டுநா்கள் கோரிக்கை விடுத்தனா்.
ராமேசுவரம் அருகே ராமா் தீா்த்தம் தெற்குப் பகுதியிலிருந்து வோ்க்கொடு பகுதி வரை கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதை சாக்கடைத் திட்டத்துக்காக சாலையில் பள்ளம் தோண்டப்பட்டது. ஒரு கிலோ மீட்டா் தொலைவுக்கு தோண்டப்பட்ட பள்ளங்கள் முழுமையாக மூடப்படாததால் சாலை பள்ளம், மேடாக உள்ளது. இதனால், வாகன ஓட்டுநா்கள் அவதிக்குள்ளாவதோடு விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது.
எனவே, அந்த சாலையை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டுநா்கள், அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...