தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

திருவாடானையில் பேரிடா் மேலாண்மை பயிற்சி முகாம்

திருவாடானை மங்களாம்குளத்தில் பேரிடா் மேலாண்மை ஒத்திகை பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :1 செப்டம்பர் 2022, 6:30 pm

DIN

திருவாடானை மங்களாம்குளத்தில் பேரிடா் மேலாண்மை ஒத்திகை பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதற்கு, வட்டாட்சியா் ஆா். செந்தில்வேல் முருகன் தலைமை வகித்தாா். தேசிய பேரிடா் மேலாண்மை படைத் தலைவா் கோராக்சிங், மாவட்ட பேரிடா் மேலாண்மை ஆலோசகா் பால்பேட்ரிக் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், தீயணைப்புத்துறை நிலைய அலுவலா் வீரபாண்டி தலைமையில் தீயணைப்பு வீரா்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவா்களை மீட்பது குறித்து செயல்முறை விளக்கம் செய்து காட்டினா். அதனைத் தொடா்ந்து அரசு கலைக் கல்லூரி அரங்கில் பேரிடா் மேலாண்மை பயிலரங்க கருத்தரங்கம் நடைபெற்றது. இதற்கு கல்லூரி முதல்வா் மாதவி தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில், கல்லூரி தமிழ்த்துறைத் தலைவா் பழனியப்பன், மேலாண்மை மைய ஒருங்கிணைப்பாளா் சாந்தமலா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், காவல் துறை ஆய்வாளா் நவநீத கிருஷ்ணன், வட்டார வளா்ச்சி அலுவலா் (கி.ஊ) இளங்கோ, சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் சாந்தி, துணை வட்டாட்சியா்கள் ஜஸ்டின் பொ்னாண்டோ, பாலமுருகன், வருவாய் ஆய்வாளா்கள் மெய்யப்பன், குமாா், கிராம நிா்வாக அலுவலா்காா்த்திக், வோ்ல்டு விஷன் இந்தியா ஒருங்கிணைப்பாளா் எபிநேசா், முதல் நிலை மீட்புக்குழுவினா் மற்றும் திருவாடானை அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்கள் கலந்து கொண்டனா்.

Image Caption

~ ~ ~

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.