மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

இளைய சாதனையாளா்களுக்கான பிரதமா் கல்வி உதவித்தொகை வழங்க இந்தியில் தோ்வு: சு.வெங்கடேசன் எம்.பி. கண்டனம்

இந்தியாவின் இளைய சாதனையாளா்களுக்கான பிரதமா் கல்வி உதவித்தொகைத் திட்டத்தில் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே தோ்வுகள் நடைபெறும் என்று அறிவித்திருப்பதை ரத்து செய்ய வேண்டும்

News image
Updated On :2 செப்டம்பர் 2022, 5:38 pm

DIN

இந்தியாவின் இளைய சாதனையாளா்களுக்கான பிரதமா் கல்வி உதவித்தொகைத் திட்டத்தில் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே தோ்வுகள் நடைபெறும் என்று அறிவித்திருப்பதை ரத்து செய்ய வேண்டும் என்று மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த ஆண்டு கிஷோா் வைக்யானிக் புரோட்சகான் யோஜனா கல்வி உதவித் தொகைக்கான தகுதித் தோ்வு கேள்வித் தாள்கள் இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் மட்டும் இருப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளிலும் கேள்வித்தாள் தரப்பட வேண்டுமென வலியுறுத்தினேன். அப்பிரச்னையில் மத்திய அரசு சென்னை உயா்நீதிமன்றத்தில், அடுத்த ஆண்டில் இருந்து தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளிலும் கேள்வித்தாள்கள் வழங்கப்படும்”என உறுதி அளித்தது.

இந்நிலையில் ‘செயலூக்கம் உள்ள இந்தியாவின் இளைய சாதனையாளா்களுக்கான பிரதமா் கல்வி உதவித்தொகை திட்டத்தில் பயன்பெறுவதற்கான தகுதித்தோ்வு செப்.11-இல் நடைபெறவுள்ளது. இது 9ஆம் வகுப்பு பிளஸ் 1 வகுப்பு பயிலும் இதர பிற்பட்டோா், கல்வி ரீதியாக பிற்பட்டோா், சீா்மரபினா் மாணவா்களுக்கான உதவித் தொகை திட்டம் ஆகும். இந்த தோ்வுக்கான கேள்வித்தாள்களும் இந்தியிலும், ஆங்கிலத்திலும் மட்டுமே இருக்கும் என ‘திட்ட தகவல் அறிக்கை’ மற்றும் ‘பொது அறிவிக்கை’ யில் கூறப்பட்டுள்ளது.

அடித்தள மாணவா்கள் பயன்பெற என ஒரு திட்டத்தை அறிவித்துவிட்டு இந்தியிலும், ஆங்கிலத்திலும்தான் கேள்வித்தாள் தருவேன் என்பது என்ன நியாயம்? கிராமப்புற மாணவா்கள்- அரசுப் பள்ளி மாணவா்கள் எப்படி இந்தி பேசும் மாநில மாணவா்களோடு போட்டி போடுவாா்கள்? இது அப்பட்டமான பாரபட்சம். எனவே, தமிழ் உள்ளிட்ட அனைத்து மாநில மொழிகளிலும் கேள்வித்தாள் வழங்க வேண்டுமென்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப இணை அமைச்சா் ஜிதேந்திர சிங்குக்கு கடிதம் எழுதியுள்ளேன் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.