கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

முதல் அரையிறுதி: மார்கோ யான்சென் அதிரடி; நியூசிலாந்துக்கு 170 ரன்கள் இலக்கு!

டி20 உலகக் கோப்பைத் தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்க அணி 8 விக்கெட்டுகளை இழந்து 169 ரன்கள் எடுத்துள்ளது.

News image
பந்தை சிக்ஸருக்கு விளாசும் மார்கோ யான்சென்- படம் | AP
Updated On :4 மார்ச் 2026, 3:29 pm

இணையதளச் செய்திப் பிரிவு

டி20 உலகக் கோப்பைத் தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்க அணி 8 விக்கெட்டுகளை இழந்து 169 ரன்கள் எடுத்துள்ளது.

ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரில் கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் திடலில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, தென்னாப்பிரிக்க அணி முதலில் விளையாடியது.

மார்கோ யான்சென் அரைசதம்; நியூசிலாந்துக்கு 170 ரன்கள் இலக்கு!

முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 169 ரன்கள் எடுத்துள்ளது.

தென்னாப்பிரிக்க அணியின் டாப் ஆர்டர் பேட்டர்கள் நியூசிலாந்தின் சுழற்பந்துவீச்சுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். கேப்டன் அய்டன் மார்க்ரம் 18 ரன்கள், டி காக் 10 ரன்கள், ரியான் ரிக்கல்டான் 0 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். டேவிட் மில்லர் 6 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். தென்னாப்பிரிக்க அணி 77 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து திணறியது.

டெவால்ட் பிரேவிஸ் 27 பந்துகளில் 34 ரன்களும் (3 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 24 பந்துகளில் 29 ரன்களும் (2 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர்) எடுத்தனர். மார்கோ யான்சென் அதிரடியாக விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டார். அதிரடியாக விளையாடிய அவர் அரைசதம் விளாசி அசத்தினார். அவர் 30 பந்துகளில் 55 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 2 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் அடங்கும்.

நியூசிலாந்து தரப்பில் ரச்சின் ரவீந்திரா, கோல் மெக்கோன்ஹி மற்றும் மாட் ஹென்றி தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். லாக்கி பெர்குசன் மற்றும் ஜேம்ஸ் நீஷம் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி நியூசிலாந்து அணி களமிறங்குகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.