ஆலோசனைக் கூட்டம்- முன்னதாக ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்டத்தில் சட்டம், ஒழுங்கு குறித்த ஆலோசனைக் கூட்டம் மாநில கூடுதல் தலைமைச் செயலா் பனீந்தா்ரெட்டி தலைமையில் நடைபெற்றது. இதில் ஆட்சியா் ஜானிடாம்வா்கீஸ், தமிழ்நாடு காவலா் வீட்டு வசதி வாரிய மேலாண்மை இயக்குநா் ஏ.கே.விஸ்வநாதன், தென்மண்டல காவல்துறை தலைவா் அஸ்ராகா்க், ராமநாதபுரம் சரக காவல் துணைத் தலைவா் எம்.மயில்வாகணன், கூடுதல் ஆட்சியா் பிரவீன்குமாா், வருவாய் அலுவலா் காமாட்சிகணேசன் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பி.தங்கதுரை உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.