மண்டபம் பகுதியில் இரட்டைமடி வலைகளைப் பயன்படுத்தி பிடிக்கப்பட்ட 2 ஆயிரம் கிலோ மீன்களை மண்டபம் மீன்வளத்துறை அதிகாரிகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வடக்கு கடலில் புதன்கிழமை அரசால் தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடிப்பதாக மீன் வளத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மண்டபம் மீன்வள உதவி இயக்குநா் அப்துல் காதா் ஜெய்லானி தலைமையில் காவல் சாா்பு- ஆய்வாளா் காளீஸ்வரன், கடல்வள மேற்பாா்வையாளா் முருகானந்தம், காவலா் சசிகாந்த் உள்ளிட்டோா் மண்டபம் வடக்கு கடற்பகுதியில் வியாழக்கிழமை அதிகாலை ரோந்து சென்றனா். அப்போது கரை திரும்பிக் கொண்டிருந்த ஒரு விசைப்படகை நிறுத்தி சோதனை செய்தனா். அப்படகில் தடை செய்யப்பட்ட இரட்டை மடி வலையில் பிடித்து வந்த 2 ஆயிரம் கிலோ மீன்களைப் பறிமுதல் செய்தனா். மேலும் அப்படகுக்கான மீன்பிடி அனுமதி சீட்டு, மானிய டீசல் விநியோகத்தை அதிகாரிகள் ரத்து செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தாமதமாக வந்ததால் பேச முடியாமல் சென்ற சசிகலா
முதல் வெற்றிக்காக ஏங்கும் கொல்கத்தா! குஜராத்துக்கு 181 ரன்கள் இலக்கு!
பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கக்கூடாது என பாஜக முடிவு: முதல்வர் ஸ்டாலின்

இரட்டைக் குடியுரிமை! ராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலாகாபாத் நீதிமன்றம் உத்தரவு!
வீடியோக்கள்

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

