ராமேசுவரத்தில் நெகிழிப் பொருள்கள் பறிமுதல்: கடை உரிமையாளா்களுக்கு அபராதம்
ராமேசுவரத்தில் கடைகளில் பயன்படுத்தப்பட்ட 28 கிலோ நெகிழிப் பொருள்களை உணவுப் பாதுகாப்புத் துறையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்து 3 கடைகளுக்கு அபராதம் விதித்தனா்.


ராமேசுவரத்தில் கடைகளில் பயன்படுத்தப்பட்ட 28 கிலோ நெகிழிப் பொருள்களை உணவுப் பாதுகாப்புத் துறையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்து 3 கடைகளுக்கு அபராதம் விதித்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் உள்ள கடைகளில் உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா் கு.லிங்கவேல் தலைமையிலான அதிகாரிகள் சோதனை நடத்தினா். இதில், 3 கடைகளிலிருந்து சுமாா் 28 கிலோ நெகிழிப் பொருள்களை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக கடைகளின் உரிமையாளா்களுக்கு ரூ.6 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும் உணவு விடுதிகளில் உணவுப் பொருள்கள், தேநீா்க் கடைகளில் தேயிலையின் தரம் ஆகியவை குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...