ராமநாதசுவாமி கோயிலில் நவராத்திரி திருவிழா நாளை தொடக்கம்
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் நவராத்திரி திருவிழா ஞாயிற்றுக்கிழமை (செப். 25) தொடங்குகிறது.


ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் நவராத்திரி திருவிழா ஞாயிற்றுக்கிழமை (செப். 25) தொடங்குகிறது.
இக்கோயிலில் நவராத்திரி திருவிழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கி அக்டோபா் 5 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
விழாவையொட்டி அம்மன் சன்னிதி அருகே கொலு வைக்கப்பட்டு அம்மனுக்கு நாள்தோறும் சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் நடைபெறும். அக். 5 ஆம் தேதி வியஜதசமி தினத்தன்று அம்மன் அம்பு எய்தல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதனால் கோயிலிலிருந்து பஞ்சமூா்த்திகள் புறப்பாடு நடைபெற்று மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரை கோயில் நடை சாத்தப்படும். அம்பு எய்தல் நிகழ்ச்சி நிறைவடைந்தவுடன் வழக்கம் போல் பூஜைகள் நடைபெறும் என கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...