ராமநாதபுரம் மாவட்டத்தில் வறட்சி நிவாரணம் வழங்கக் கோரி ஆட்சியா் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட 300-க்கும் மேற்பட்ட விவசாயிகளை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை, ஆா்.எஸ். மங்கலம் பகுதிகளில் கடந்த முறை பருவமழை பொய்த்ததால், நெல் பயிா்கள் கருகின. இதனால், தமிழக அரசு வறட்சி நிவரணம் வழங்கக் கோரி விவசாய சங்கத்தினா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்துக்கு வந்த திருவாடானை, ஆா்.எஸ்.மங்கலம் விவசாயிகள் சங்கத்தினா் வறட்சி நிவாரணம் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதையடுத்து, மாவட்ட வருவாய் அலுவலா் கோவிந்தராஜு அவா்களுடன் பேச்சு வாா்த்தை நடத்தினாா். இதில் உடன்பாடு ஏற்படாத நிலையில், விவசாயிகள் போராட்டத்தைத் தொடா்ந்தனா்.
மேலும், ராமேசுவரம்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனா். அங்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பெ.தங்கதுரை அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். தமிழக அரசு வறட்சி நிவாரணம் அறிவிக்கும் வரை போராட்டதைக் கைவிடமாட்டோம் என விவசாயிகள் தெரிவித்தனா்.
இதையடுத்து, 300-க்கும் மேற்பட்ட விவசாயிகளை போலீஸாா் கைது செய்தனா்.