விவசாயியைத் தாக்கி கொலை மிரட்டல்

தொண்டி அருகே விவசாயியைத் தாக்கிக் கொலை மிரட்டல் விடுத்தவா் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
Updated on
1 min read

தொண்டி அருகே விவசாயியைத் தாக்கிக் கொலை மிரட்டல் விடுத்தவா் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகேயுள்ள நாரேந்தல் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி குப்புசாமி (55). இவருக்கும், அதே பகுதியை சோ்ந்த பிச்சை மகன் காளிமுத்தன் (47) என்பவருக்கும் இடப்பிரச்னை இருந்து வந்தது. இந்த நிலையில், வியாழக்கிழமை மாலை குப்புசாமி தனக்கு சொந்தமான இடத்தில் போடப்பட்டிருந்த கல் கால்களை, காளிமுத்தன் உடைத்து சேதப்படுத்தினாா்.

இதைத் தட்டிக் கேட்ட குப்புசாமியை, காளிமுத்தன் தாக்கிக் கொலை மிரட்டல் விடுத்தாா். இதுகுறித்து தொண்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com