எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதுக்கு சென்னை மேயர் பிரியா கண்டனம் தெரிவித்த நிலையில், 'பெண்கள் பற்றி உதயநிதி பேசியது சரியா?' என்ற கேள்விக்கு பதிலளிக்காமல் சென்றார்.
நேற்று தஞ்சாவூரில் நடைபெற்ற காவிரி நீர் தொடர்பான ஆர்ப்பாட்டத்தில் முதல்வர் விஜய் மற்றும் பெண்கள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியது சர்ச்சையான நிலையில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இன்று அவர் கைது செய்யப்பட்டு தஞ்சைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்.
உதயநிதி ஸ்டாலின் கைதுக்கு தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் சென்னை மேயர் ஆர். பிரியா இன்று செய்தியாளர்களுடன் பேசுகையில்,
"எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது கண்டிக்கத்தக்கது. உதயநிதி கைது செய்வதால் இன்று அவரைப் பார்க்க கட்சி நிர்வாகிகள் வந்திருந்தார்கள். ஆனால் அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதில் இருவருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது.
கட்சிக்காக உழைத்தவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியுள்ளனர். அவர்கள் என்ன தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டார்களா? இது முற்றிலும் அராஜக அரசியலாகத்தான் பார்க்கப்படுகிறது.
ஜனநாயகம் என்று சொல்கிறார்கள். ஆனால் இன்று ஜனநாயகம் என்றால் என்னவென்றே தெரியாத நிலையில்தான் இருக்கிறார்கள். ஜனநாயகன் படத்திற்கு தியேட்டரில் அழுகிறார்கள்.
ஒருவருக்கு ரத்தம் வரும் அளவுக்கு போலீசார் அடிப்பதுதான் ஜனநாயகமா? காவல்துறையினர் உங்கள் கைகளில் இருந்தால் என்ன வேண்டுமானாலும் பண்ணலாமா? இதற்கு எல்லாம் அரசு பதில் சொல்ல வேண்டும். சட்டப்படி நாங்கள் இதனை எதிர்கொள்வோம்" என்றார்.
மேலும் 'பெண்கள் பற்றி உதயநிதி பேசியது சரியா? தவறா?' என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு மேயர் பிரியா பதிலளிக்காமல், வேகமாக திரும்பிச் சென்றார்.
Summary
Chennai Mayor R. Priya condemns the arrest of Opposition Leader Udhayanidhi Stalin
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
அராஜக அரசியல் செய்யும் தவெக! உதயநிதி கைதுக்கு மேயர் பிரியா கண்டனம்!
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மேயர் பிரியா புகார்! எதற்கு தெரியுமா?

அமைச்சர் பங்கேற்ற சென்னை மாநகராட்சி நிகழ்ச்சியை புறக்கணித்த மேயர் பிரியா!

சென்னை மாநகராட்சியின் ரூ. 700 கோடி டெண்டர்கள் ரத்து! என்ன செய்யப் போகிறார் மேயர் பிரியா?
விடியோக்கள்

உதயநிதி ஸ்டாலின் கைது! பரபரப்பான நிமிடங்கள்! | TVK | DMK




