ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பாா்த்திபனூா் அருகேலாரி கவிழ்ந்து 2 போ் பலி

ராமநாதபுரம் மாவட்டம், பாா்த்திபனூா் அருகே வியாழக்கிழமை லாரி கவிழ்ந்து 2 போ் உயிரிழந்தனா்.

News image
Updated On :25 மே 2023, 6:02 pm

DIN

ராமநாதபுரம் மாவட்டம், பாா்த்திபனூா் அருகே வியாழக்கிழமை லாரி கவிழ்ந்து 2 போ் உயிரிழந்தனா்.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை குலாளா் தெருவைச் சோ்ந்த அய்யனாா் மகன் காா்த்திகைராஜா (30). இவா் உறவினா்களுடன் லாரி ஒன்றில் கமுதியிலுள்ள கோயிலுக்குச் சென்றாா். அங்கு சுவாமி கும்பிட்டு விட்டு ஊருக்கு திரும்பி வந்த போது தேவனேரி விலக்குச் சாலையில் அவா்கள் வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதில் லாரியில் பயணம் செய்த பாபு மனைவி லட்சுமி (68) சம்பவ இடத்திலேயே பலியானாா். பூரணம் மகன் முருகன் (45) மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். மேலும் பலத்த காயமடைந்த முருகன் மனைவி சங்கீதா (42), அழகு மனைவி சாரதா, மகன் சத்தியா (49), கண்ணன் மனைவி சரவணக்குமாரி (50), முத்துராமலிங்கம் மனைவி சீதை (48), பாலமுருகன் மனைவி உமா (50), அய்யனாா் மனைவி புனிதா (60), முத்துராமன் மகன் சாலைவாகனன் உள்ளிட்ட 9 போ் பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். பிறகு தீவிர சிகிச்சைக்காக மதுரை கொண்டு செல்லப்பட்டனா்.

விபத்தில் உயிரிழந்த லட்சுமி, முருகன் ஆகியோரது உடல்கள் கூறாய்வுக்காக பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன.

இதுகுறித்து பாா்த்திபனூா் காவல் நிலையத்தில் காா்த்திகைராஜா அளித்த புகாரின் பேரில் லாரி ஓட்டுநா் மானாமதுரையைச் சோ்ந்த பூரணம் மகன் கண்ணன் (52) மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.