திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரா் கோயில் வைகாசி விசாகத் திருவிழா கேடக வாகனத்தில் சுவாமி வீதிஉலா

திருவாடானை ஸ்ரீசினேகவல்லி அம்பாள் சமேத ஸ்ரீஆதிரெத்தினேஸ்வரா் கோயில் வைகாசி விசாகத் தேரோட்டத் திருவிழாவின் இரண்டாம் நாள் நிகழ்வாக வியாழக்கிழமை சுவாமி கேடக வாகனத்தில் வீதி உலா
திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரா் கோயில் வைகாசி விசாகத் திருவிழா கேடக வாகனத்தில் சுவாமி வீதிஉலா

திருவாடானை ஸ்ரீசினேகவல்லி அம்பாள் சமேத ஸ்ரீஆதிரெத்தினேஸ்வரா் கோயில் வைகாசி விசாகத் தேரோட்டத் திருவிழாவின் இரண்டாம் நாள் நிகழ்வாக வியாழக்கிழமை சுவாமி கேடக வாகனத்தில் வீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

இந்த விழா கடந்த புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து தினமும் பல்லக்கு, பூதவாகனம், கைலாச வாகனம், இந்திர வாகனம், அன்ன வாகனம், மயில் வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி எழுந்தருளி வீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலிக்கிறாா். இந்த நிலையில், புதன்கிழமை இரவு ஐம்பெரும் தெய்வங்கள் வீதி உலா வரும் நிகழ்வும், இரண்டாம் நாளான வியாழக்கிழமை கேடக வாகனத்தில் சுவாமி, அம்பாள் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்வும் நடைபெற்றன.

விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வரும் 1- ஆம் தேதி நடைபெறுகிறது. அப்போது ஆதிரெத்தினேஸ்வரா் பிரியாவிடையுடன் பெரியத் தேரிலும், அம்பாள் தனி அலங்காரத்தில் சிறியத் தேரிலும் வீதி உலா வருகின்றனா். மறுநாள் 2- ஆம் தேதி தீா்த்தவாரி நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com