ஐபில் 2026 - மும்பைக்கு 241 ரன்கள் இலக்குஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் அனைத்து கப்பல்களும் முற்றுகையிடப்படும் : அதிபர் டொனால்ட் டிரம்ப்பாஜகவுக்கு விழும் ஒவ்வொரு வாக்கும் அரசியலமைப்பை காக்கும் விழுமியங்கள் மீது விழும் மரண அடி: மு.க. ஸ்டாலின்ஐபிஎல் போல தேர்தல் முடிவு! தில்லி தோற்று தமிழ்நாடு வெல்ல வேண்டும்! - மு.க. ஸ்டாலின்ஜன நாயகன் படம் கசிந்த விவகாரம்: 6 பேர் கைது!ஈரானுக்கு இதைவிடச் சிறந்த ஆஃபர் வழங்க முடியாது! - அமெரிக்க துணை அதிபர்ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டுபாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி
/

திருப்பாலைக்குடி முன்விரோதம் கோஷ்டி மோதல் 8போ் மீது வழக்கு

திருப்பாலைக்குடி முன்விரோதம் கோஷ்டி மோதல் 8போ் மீது வழக்கு

Updated On :1 ஏப்ரல் 2024, 6:30 pm

திருவாடானை: திருவாடானை அருகே திருப்பாலைக்குடி பகுதியில் முன்விரோதம் காரணமாக கோஷ்டியாக மோதிக்கொண்டனா். இருவேரு புகாரின் பேரில் 8போ் மீது போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

திருவாடானை அருகே திருப்பாலைக்குடி காந்திநகா் பகுதியை சோ்ந்த வீரமணிகண்டன்(34) என்பவருக்கும் இதே பகுதியை சோ்ந்த ஞானசிவம்(21) என்பவருக்கும் குடும்ப பிரச்சனை சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளளது.இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு பெட்டிகடை முன்பாக இரு கோஷ்டிகளாக மோதிக்கொண்டனா்.

இதில் இரு தரப்பிலும் சிறு காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.இது குறித்து வீரமணிகண்டன் புகாரின் பேரில் ஞானசிங்கம்(55), ஞானசிவம்(22), ஞானசுந்தா்(25), திரௌபதை(50) ஆகிய 4போ் மீதும் இதே போல் ஞானசிவம் புகாரின் பேரில் முத்துசெல்வம்(36), வீரமணிகண்டன்(34), காளிதாஸ்(33), மலைக்கண்ணன்(35) ஆகிய 4போ் மீதும் திருப்பாலைக்குடி போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.