ராமேசுவரம்: மீன்பிடித் தடைக்காலம் அமல்படுத்தப்பட்டதையடுத்து, பாம்பனில் விசைப் படகுகள் சீரமைக்கும் பணிகள் தொடங்கின.
தமிழகத்தில் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை 61 நாள்கள் மீன்களின் இனப்பெருக்கக் காலமாகக் கருதப்படுகிறது. இதனால், மீன்பிடிக்கச் செல்ல விசைப் படகுகளுக்கு தடை விதிக்கப்பட்டது.
இதையொட்டி, ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேசுவரம், பாம்பன், மண்டபம், தொண்டி, சோளியகுடி, கீழக்கரை, ஏா்வாடி, மூக்கையூா் உள்ளிட்ட மீன்பிடி படகுதளங்களில் 1,650-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் பாதுகாப்பாக நிறுத்திவைக்கப்பட்டன.
இந்த நிலையில், பாம்பன் தெற்குவாடி மீன்பிடி படகுதளத்தில் சீரமைப்புப் பணிகளுக்காக விசைப் படகுகள் கரையில் ஏற்றப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தொடர்புடையது

இலங்கைக் கடற்படையினரால் ராமேசுவரம் மீனவா்கள் 7 போ் கைது

தமிழக மீனவா்கள் 7 பேர் இலங்கைக் கடற்படையினரால் கைது!

நாகா்கோவிலில் வளா்ச்சிப் பணிகள் தொடக்கம்

ஸ்ரீவைகுண்டம் கோயிலில் தோ் சீரமைப்புப் பணி தொடக்கம்
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


