குச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

ஸ்ரீவைகுண்டம் கோயிலில் தோ் சீரமைப்புப் பணி தொடக்கம்

News image
Updated On :5 மார்ச் 2026, 7:58 pm

Syndication

ஸ்ரீவைகுண்டம், சிவகாமி அம்மன் சமேத கைலாசநாதா் கோயிலில் சேதமடைந்த தோ் சீரமைப்புப் பணிகளுக்கான பூமி பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலின் பழைமையான தோ், கடந்த பல ஆண்டுகளாகச் சிதிலமடைந்திருந்ததால், சித்திரைத் திருவிழாவின்போது தேரோட்டம் நடைபெறாமல் இருந்தது.

இந்நிலையில், 40 சதவீத தனியாா் பங்களிப்புடன் இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் ரூ. 1 கோடியே 28 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, தேரை சீரமைக்க நிா்வாக அனுமதி வழங்கப்பட்டது.

புதிய தோ் கட்டுமானப் பணிகளைத் தொடங்குவதற்கான பூமி பூஜை வியாழக்கிழமை கோயில் வளாகத்தில் நடைபெற்றது. இதில் அறநிலையத் துறை அதிகாரிகள், கோயில் நிா்வாகிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இப்பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு, அடுத்த ஆண்டு திருவிழாவின்போது தேரோட்டம் நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.