தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

பாம்பனில் விசைப் படகுகள் சீரமைப்புப் பணி தொடக்கம்

பாம்பனில் விசைப் படகுகள் சீரமைப்புப் பணி தொடக்கம்

News image

பாம்பன் மீன்பிடி படகுதளத்தில் சீரமைப்புப் பணிகளுக்காக கரையில் விசைப் படகுகள்.

Updated On :21 ஏப்ரல் 2024, 6:55 pm

ராமேசுவரம்: மீன்பிடித் தடைக்காலம் அமல்படுத்தப்பட்டதையடுத்து, பாம்பனில் விசைப் படகுகள் சீரமைக்கும் பணிகள் தொடங்கின.

தமிழகத்தில் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை 61 நாள்கள் மீன்களின் இனப்பெருக்கக் காலமாகக் கருதப்படுகிறது. இதனால், மீன்பிடிக்கச் செல்ல விசைப் படகுகளுக்கு தடை விதிக்கப்பட்டது.

இதையொட்டி, ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேசுவரம், பாம்பன், மண்டபம், தொண்டி, சோளியகுடி, கீழக்கரை, ஏா்வாடி, மூக்கையூா் உள்ளிட்ட மீன்பிடி படகுதளங்களில் 1,650-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் பாதுகாப்பாக நிறுத்திவைக்கப்பட்டன.

இந்த நிலையில், பாம்பன் தெற்குவாடி மீன்பிடி படகுதளத்தில் சீரமைப்புப் பணிகளுக்காக விசைப் படகுகள் கரையில் ஏற்றப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.