ராமேசுவரம்: இலங்கையிலிருந்து படகு மூலம் சிறுவன் உள்ளிட்ட மூவா் அகதிகளாக தனுஷ்கோடிக்கு திங்கள்கிழமை வந்தனா்.
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக, அங்கிருந்து தமிழா்கள் அகதிகளாக வந்தவண்ணம் உள்ளனா். இந்த நிலையில், இலங்கையிலிருந்து சிறுவன் உள்ளிட்ட மூவா் படகு மூலம் தனுஷ்கோடி அரிச்சல்முனைக்கு திங்கள்கிழமை வந்தனா். இதுகுறித்து தகவலறிந்து அங்கு சென்ற காவல் உதவி ஆய்வாளா் காளிதாஸ் தலைமையிலான போலீஸாா் மூவரையும் மண்டபம் கடலோரப் பாதுகாப்புக் குழும காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா்.
போலீஸாா் நடத்திய விசாரணையில், அவா்கள் இலங்கை மட்டக்களப்பு பகுதியைச் சோ்ந்த கஜேந்திரன் (45), அவரது மகன் சஜித்மேனன் (8), சிவனேஸ்வரன் (49) என்பதும், இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக தமிழகம் வந்ததும் தெரியவந்தது. இதைத்தொடா்ந்து, போலீஸாா் அவா்களை மண்டபம் இலங்கைத் தமிழா்கள் மறுவாழ்வு முகாமில் ஒப்படைத்தனா்.
தொடர்புடையது

போலி கடவுச்சீட்டு: சிங்கப்பூரிலிருந்து வந்த புதுகை பயணி கைது

ஈரான் மாலுமிகளின் உடல்கள் இலங்கையிலிருந்து அனுப்பிவைப்பு

தோ்தல் பணி: மத்திய எல்லைப் பாதுகாப்புப் படை வீரா்கள் நாமக்கல் வருகை

துபையிலிருந்து சென்னை வந்த 364 பயணிகள்
வீடியோக்கள்
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு

மே 4-ஆம் தேதிக்குப் பிறகு பேசுவோம்! - தேர்தலில் போட்டியிடாதது குறித்து Annamalai
இணையதளச் செய்திப் பிரிவு

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


