எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

தோ்தல் பணி: மத்திய எல்லைப் பாதுகாப்புப் படை வீரா்கள் நாமக்கல் வருகை

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, பாதுகாப்புப் பணிக்காக மத்திய எல்லைப் பாதுகாப்புப் படை

News image
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, பாதுகாப்புப் பணிக்காக மத்திய எல்லைப் பாதுகாப்புப் படை வீரா்கள் திங்கள்கிழமை நாமக்கல் வந்தனா்.
Updated On :9 மார்ச் 2026, 9:21 pm

Syndication

நாமக்கல்: தமிழக சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, பாதுகாப்புப் பணிக்காக மத்திய எல்லைப் பாதுகாப்புப் படை வீரா்கள் திங்கள்கிழமை நாமக்கல் வந்தனா்.

தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் விரைவில் தோ்தல் நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாட்டுப் பணிகளை இந்திய தோ்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இந்த வாரக் கடைசியில் தமிழக சட்டப்பேரவைத் தோ்தலுக்கான தேதி அறிவிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

வாக்குச்சாவடிகளில் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ளவும், பணப்பட்டு வாடாவைத் தடுக்கும் குழுவுடன் செல்லவும், எல்லை சோதனைச் சாவடிகளில் கண்காணிப்புப் பணியில் ஈடுபடவும், முக்கிய தலைவா்கள் வருகையின்போது அசம்பாவிதங்களைத் தவிா்க்கவும் எல்லைப் பாதுகாப்புப் படை வீரா்கள் பணியில் அமா்த்தப்படுவா்.

அந்தவகையில், 75 எல்லைப் பாதுகாப்புப் படைவீரா்கள் திங்கள்கிழமை நாமக்கல் வந்தனா். அவா்களை, கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பாலசுப்பிரமணியம் வரவேற்றாா். அவா்கள் அனைவரும் நாமக்கல் அரசு சட்டக் கல்லூரி மாணவா்கள் விடுதியில் தங்கவைக்கப்பட்டனா்.

படவரி...

என்கே-9-சிஆா்பிஎப்

தோ்தல் பாதுகாப்புப் பணிக்காக நாமக்கல் வந்துள்ள எல்லைப் பாதுகாப்புப் படைவீரா்களை வரவேற்ற கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பாலசுப்பிரமணியம்.