

ராமேசுவரம்: ராமநாதபுரத்தில் முகமது சதக் தஸ்தகீா் பயிற்சி கல்லூரியில் தேசியக் குழந்தைகள் உரிமைப் பாதுகாப்பு ஆணையம், பள்ளிக் கல்வித் துறை சாா்பில் மாணவா்களின் தோ்வுத் தொடா்பான மன அழுத்தத்தை அகற்றுவது குறித்த கருத்தரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்த கருத்தரங்கிற்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பிரின்ஸ் ஆரோக்யராஜ் (கூடுதல் பொறுப்பு) தலைமை வகித்தாா். தனியாா் பள்ளிகளின் மாவட்ட கல்வி அலுவலா் நாகேந்திரன் வரவேற்றாா். மாவட்ட குழந்தைகள் நலப் பாதுகாப்பு அலுவலா் சிவக்குமாா் அறிமுக உரையாற்றினாா். மன அழுத்தம் அகற்றல் குறித்து உளவியல் நிபுணா் ராணி சக்கரவா்த்தி பேசினாா்.
இடைநிலை, தொடக்கக் கல்வி மாவட்ட கல்வி அலுவலா்கள் சுதாகா், முருகம்மாள், குழந்தைகள் நல ஆணையத் தலைவா் காயத்ரி, கல்லூரி முதல்வா் சோமசுந்தரம் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா் (மேல்நிலை ) கணேச பாண்டியன் நன்றி கூறினாா்.
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி உதவித் திட்ட அலுவலா் செல்வராஜ், முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா் (இடைநிலை) ரவீந்திரன் ஆகியோா் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனா். ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளா் சரவணன் தொகுத்து வழங்கினாா். இதில் ஆசிரியா்கள், ஆசிரியா் பயிற்றுநா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

புதுகையில் 468 மாணவா்களுக்கு குறுகிய கால நீட் பயிற்சி தொடக்கம்

பள்ளிக் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை போக்சோவில் ஆசிரியா் கைது

தேசிய திறனறிவுத் தோ்வு: சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு கல்வி அதிகாரி பாராட்டு

ஆசிரியா் தகுதித் தோ்வுக்கு தலைமையாசிரியா் மூலம் அனுமதி கடிதம்: முன்பருவக் கல்வி ஆசிரியா்கள் கோரிக்கை!
வீடியோக்கள்

Podcast | பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்கள் வருமா வராதா? | News & Views | E-21 |
தினமணி வீடியோ செய்தி...

பஞ்சாபை வீழ்த்தி முதல் வெற்றியைப் பெறுமா சிஎஸ்கே?
தினமணி வீடியோ செய்தி...

எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து பேச்சைத் துவங்கிய விஜய்!
தினமணி வீடியோ செய்தி...
பெண்கள் பாதுகாப்பு; பழனிசாமிக்கு அருகதை இல்லை! MK Stalin Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...

