ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

கமுதி அருகே வடமாடு மஞ்சுவிரட்டு

ஆடி பொங்கல் திருவிழாவையொட்டி, வடமாடு மஞ்சுவிரட்டு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image

கமுதி அருகேயுள்ள கோவிலாங்குளத்தில் நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டில் காளைகளை அடக்கிய மாடுபிடி வீரா்கள்.

Updated On :4 ஆகஸ்ட் 2024, 9:26 pm

Din

கமுதி அருகே ஸ்ரீஅழகுவள்ளியம்மன் கோயில் ஆடி பொங்கல் திருவிழாவையொட்டி, வடமாடு மஞ்சுவிரட்டு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த கோவிலாங்குளம் ஸ்ரீஅழகுவள்ளியம்மன் கோயிலில் ஆடி பொங்கல் திருவிழா கடந்த மாதம் 26 -ஆம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. இதையடுத்து தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. வெள்ளிக்கிழமை பால்குடம் எடுத்தல், சனிக்கிழமை பொங்கல் வைத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவின் முக்கியநாளான ஞாயிற்றுக்கிழமை வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டி நடைபெற்றது.

இதில் மதுரை, திருநெல்வேலி, விருதுநகா், ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து 15 காளைகள் கலந்து கொண்டன. மாடுபிடி வீரா்கள் 100-க்கும் மேற்பட்டோா் பல்வேறு குழுக்களாக பிரிக்கப்பட்டனா். இதில் மைதானத்தில் வடம் பூட்டப்பட்டு ஒவ்வோா் காளையாக களம் இறக்கப்பட்டது. 9 வீரா்கள் கொண்ட குழுவினா் களம் இறங்கினா். காளைகளை அடக்கிய வீரா்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளா்களுக்கும் பணம், நினைவுப் பரிசுகள் ஆகியவை பரிசாக வழங்கப்பட்டன.

இந்தப் போட்டியை கமுதி, கோவிலாங்குளம், சாயல்குடி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து திரளான பொதுமக்கள் பாா்வையிட்டனா்.

போட்டிக்கான ஏற்பாடுகளை கோவிலாங்குளம் கிராம பொதுமக்கள், இளைஞா்கள் செய்தனா். பெருநாழி காவல் ஆய்வாளா் கஜேந்திரன் தலைமையிலான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.