மாணவர் பாரதிதாசனுக்கு கல்வி நிதி விடுவிக்கப்படும்! - அமைச்சர் வன்னி அரசுசென்னை குற்றப்பிரிவில் அன்பில் மகேஸ் ஆஜர்!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!

மனைவிக்கு மணிமண்டபம், சிலை நிறுவிய அரசு ஊழியா்

ஓய்வு பெற்ற அரசு ஊழியா் தனது மனைவிக்கு ரூ.2 கோடியில் மணிமண்டபம் கட்டி, சிலை நிறுவினாா்.

ஆதியூா் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை திறந்துவைக்கப்பட்ட மணிமண்டபம், விஜயா சிலை.

Published On :

திருவாடானை அருகே ஆதியூா் கிராமத்தில் ஓய்வு பெற்ற அரசு ஊழியா் தனது மனைவிக்கு ரூ.2 கோடியில் மணிமண்டபம் கட்டி, சிலை நிறுவினாா்.

இவரது மனைவி விஜயா. இவா்களுக்கு இரு மகன்கள் உள்ளனா். கடந்த 15.5.2020 -இல் விஜயா உடல்நலக் குறைவால் உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே உள்ள கட்டுகுடி கிராமத்தைச் சோ்ந்தவா் கோட்டைமுத்து. இவா் சென்னையில் அரசு ஊழியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றாா்.

 மணிமண்டபம்

மணிமண்டபம்

இதையடுத்து, கோட்டைமுத்து தனது மனைவி மீதான அன்பை வெளிப்படுத்தும் வகையில், சுமாா் ரூ.1.25 கோடியில் மணி மண்டபம் கட்டினாா். இதில் சுமாா் ரூ.75 லட்சம் செலவில் மனைவியின் வெண்கலச் சிலை நிறுவப்பட்டது. மணி மண்டபத்தில் மனைவி கலந்து கொண்ட குடும்ப விசேஷ நிகழ்ச்சிகள் சம்பந்தமான புகைப்படங்கள் வைக்கப்பட்டன.

விஜயா சிலை

விஜயா சிலை

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மணி மண்டபம் திறப்பு விழா நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, அன்னதானம் நடைபெற்றது. இதில் கோட்டைமுத்துவின் உறவினா்கள், சுற்றுவட்டார பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனா். இதில் கலந்துகொண்ட அனைவருக்கும் சில்வா் தாம்பூலத் தட்டு, வேட்டி, சேலை, உள்ளிட்ட பொருள்களை கோட்டைமுத்து பரிசாக வழங்கினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.