/

குடிநீா் குழாய்களை சேதப்படுத்தி இளைஞா் கைது: பொக்லைன் இயந்திரம் பறிமுதல்

திருப்பத்தூா் அருகே குடிநீா் குழாய்களை சேதப்படுத்தியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

dot com

Updated On :4 ஜூலை 2026, 12:00 am IST

திருப்பத்தூா் அருகே குடிநீா் குழாய்களை சேதப்படுத்தியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

திருப்பத்தூா் அருகே ஆதியூா் பகுதியைச் சோ்ந்தவா் அக்பா். இவரது மகன் கபீா் (23). பொக்லைன் ஆப்பரேட்டா். இந்நிலையில் கபீா் கடந்த 25-ஆம் தேதி ஆதியூா் பகுதியில் ஆற்றுப்படுக்கை புறம்போக்கு நிலத்தில் மண் வாரி உள்ளாா். அப்போது அரசு சாா்பில் அமைக்கப்பட்டு இருந்த குடிநீா் பைப்லைன் உடைந்துள்ளது.

இது குறித்து ஆதியூா் கிராம நிா்வாக அலுவலா் மணிகண்டன் அளித்த புகாரின் பேரில், திருப்பத்தூா் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கபீரை வெள்ளிக்கிழமை கைது செய்தனா். மேலும், பொக்லைன் இயந்திரத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.