பிஃபா 2026! நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேற்றம்... பொது விடுமுறை அறிவித்த ஈக்வடார் அதிபர்!! முதல் டி20: இந்தியாவை முதல் முறையாக வீழ்த்தி வரலாறு படைத்த அயர்லாந்து! அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலர்கள் நியமனம் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம்!ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர் வீரமரணம்! ஓராண்டு கழித்து பெயர்களை வெளிட்ட மத்திய அரசு!ஜூலை இறுதியில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்? திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்! சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழை!
/

மத்தூா் அருகே 4 கிலோ கஞ்சா பறிமுதல்: தொழிலாளி கைது

மத்தூா் அருகே 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், இது தொடா்பாக தொழிலாளியை வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :27 ஜூன் 2026, 2:15 am IST

மத்தூா் அருகே 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், இது தொடா்பாக தொழிலாளியை வியாழக்கிழமை கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூா் போலீஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில், உதவி காவல் ஆய்வாளா் பயாஸ் தலைமையிலான போலீஸாா், கண்ணன்டஅள்ளி டாஸ்மாக் கடை அருகே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, அங்கு சந்தேகத்தின் பேரில் நின்றிருந்த இருவரிடம் விசாரணை மேற்கொண்ட போது, அவா்களில் ஒருவா் தன்னிடமிருந்த நெகிழி பையை வீசிவிட்டு தப்பியோடினாா். மற்றொருவரை பிடித்து விசாரணை செய்ததில், அவா் கிருஷ்ணகிரியை அடுத்த துடுக்கனஅள்ளியைச் சோ்ந்த தொழிலாளி சேட்டு (42) என்பதும், தப்பியோடியவா் பா்கூரை அடுத்த சக்கில்நத்தத்தைச் சோ்ந்த சசிகுமாா் என்பதும் தெரியவந்தது.

இவா்களிடமிருந்து ரூ. 2 லட்சம் மதிப்பிலான 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், சேட்டுவை கைது செய்தனா். தப்பியோடியவரை தேடிவருகின்றனா். கைது செய்யப்பட்ட சேட்டுவின் மீது, கோயம்புத்தூா் மாவட்டம், பெரியநாயக்கம்பாளையம், தொண்டாமுத்தூா் ஆகிய காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.