நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மேலத்தூவலில் வடமாடு மஞ்சுவிரட்டு

News image

முதுகுளத்தூா் அருகே மேலத்தூவலில் வியாழக்கிழமை நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டு.

Updated On :29 ஆகஸ்ட் 2024, 7:23 pm

Din

முதுகுளத்தூா் அருகே மேலத்தூவல் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி, வடமாடு மஞ்சுவிரட்டு வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகா், சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களைச் சோ்ந்த காளைகள் பங்கேற்றன. 100-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரா்கள் கலந்து கொண்டு காளைகளை அடக்கினா். ஒரு சில வீரா்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது.

வெற்றி பெற்ற வீரா்களுக்கும், அடங்காத காளைகளின் உரிமையாளா்களுக்கும் பரிசுப் பொருள்கள், பணம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை மேலத்தூவல் கிராமப் பொதுமக்கள், இளைஞா்கள் செய்தனா்.