2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

வீட்டில் 3.5 டன் ரேஷன் அரிசி பதுக்கியவா் கைது

சாயல்குடி அருகே வீட்டில் 3.5 டன் ரேஷன் அரிசி பதுக்கிய இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :11 டிசம்பர் 2024, 11:27 pm

Din

சாயல்குடி அருகே வீட்டில் 3.5 டன் ரேஷன் அரிசி பதுக்கிய இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், வாலிநோக்கம் கடலோரக் காவல் நிலைய உதவி ஆய்வாளா் பெருமாள், தலைமைக் காவலா் மதியழகன் உள்ளிட்ட போலீஸாா் சாயல்குடி அருகில் உள்ள நரிப்பையூரில் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, ஒரு வீட்டில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததைக் கண்டறிந்தனா். தலா 50 கிலோ எடை கொண்ட 70 மூட்டைகளில் 3,500 கிலோ ரேசன் அரிசி இருந்தது.

விசாரணையில் அரிசி மூட்டைகளை ஓரிவயல் சண்முகம் மகன் சந்தோஷ்குமாா் (19) விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, ராமநாதபுரம் குடிமைப் பொருள் பொருளாதார குற்றப் புலனாய்வுத் துறை போலீஸாா் சந்தோஷ்குமாரைக் கைது செய்து, 3,500 கிலோ அரிசியைப் பறிமுதல் செய்து, கடலாடி நுகா் பொருள் வாணிபக்கழகக் கிட்டங்கியில் ஒப்படைத்தனா்.