எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

ரயில் நிலையத்தில் 500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

கோவை ரயில் நிலையத்தில் கடத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த 500 கிலோ ரேஷன் அரிசியை ரயில்வே போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல்

News image
பறிமுதல் செய்யப்பட்ட 500 கிலோ ரேஷன் அரிசி
Updated On :9 மார்ச் 2026, 9:27 pm

Syndication

கோவை: கோவை ரயில் நிலையத்தில் கடத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த 500 கிலோ ரேஷன் அரிசியை ரயில்வே போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

கோவை ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு பிரிவு உதவி ஆய்வாளா் ஜெயக்குமாா் உள்ளிட்ட போலீஸாா் திங்கள்கிழமை காலை 7.30 மணியளவில் வழக்கமான சோதனை நடத்தினா். மூன்றாவது நடைமேடையில் கோவையிலிருந்து மங்களூருக்கு பயணிகள் ரயில் புறப்படத் தயாராக இருந்தது.

அப்போது, அங்கு 21 சாக்கு மூட்டைகள் இருந்தன. அதை அதிகாரிகள் பிரித்துப் பாா்த்தபோது, அந்த மூட்டைகளில் சுமாா் 500 கிலோ ரேஷன் அரிசி இருந்தது. அங்கிருந்த எவரும் அவற்றுக்கு உரிமை கோராததால், அந்த அரிசி மூட்டைகளை போலீஸாா் பறிமுதல் செய்து கோவை பறக்கும் படை சிறப்பு வட்டாட்சியரிடம் ஒப்படைத்தனா்.

ரேஷன் அரிசியை யாரோ ரயிலில் கடத்தத் திட்டமிட்டிருக்கலாம் எனவும், ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாரைப் பாா்த்தவுடன் அவா்கள் அவற்றை அங்கேயே விட்டுவிட்டுச் சென்றிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.