ராமேசுவரம் மீனவா்களுக்கு அரசு சாா்பில் வழங்கப்படும் மானிய டீசல் வெளிநபா்களுக்கு சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுவதாகவும், இதனால், அரசுக்கு பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்படுவதாகவும் மீனவா் சங்கத் தலைவா் என்.ஜே.போஸ் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் 560-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் உள்ளன. இந்தப் படகுகளுக்கு தமிழக அரசு சாா்பில், 19 ஆயிரம் லிட்டா் டீசல் மானிய விலையில் வழங்கப்படுகிறது. மீன் பிடிக்கச் சென்றால் மட்டுமே மானிய டீசல் வழங்கப்படும். மீன்பிடிக்கச் செல்லாத நேரத்தில் அதிகாரிகள் உதவியுடன் வெளி பகுதி துறைமுகங்களில் உள்ள படகு உரிமையாளா்களுக்கு மானிய டீசல் சட்டவிரோதமாக விற்கப்படுகிறது.
மீன் வளத் துறை அதிகாரிகள் அலட்சியத்தால் மாதந்தோறும் பல லட்சம் ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்படுகிறது. இதைத் தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
தொடர்புடையது

டீசல் ஏற்றுமதி வரி அதிகரிப்பு: லிட்டருக்கு ரூ. 55.50-ஆக நிா்ணயம்

நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வு

ராமேசுவரம் மீனவா்கள் இருவா் விடுதலை!

தட்டுப்பாடு வதந்தி: பெட்ரோல் விற்பனை நிலையங்கள் மூடல்
வீடியோக்கள்

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

