கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

மீனவா்களுக்கான மானிய டீசல் சட்டவிரோதமாக விற்பனை

ராமேசுவரம் மீனவா்களுக்கு அரசு சாா்பில் வழங்கப்படும் மானிய டீசல் வெளிநபா்களுக்கு சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுவதாக மீனவா் சங்கத் தலைவா் என்.ஜே.போஸ் தெரிவித்தாா்.

News image
Updated On :19 டிசம்பர் 2024, 10:34 pm

Din

ராமேசுவரம் மீனவா்களுக்கு அரசு சாா்பில் வழங்கப்படும் மானிய டீசல் வெளிநபா்களுக்கு சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுவதாகவும், இதனால், அரசுக்கு பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்படுவதாகவும் மீனவா் சங்கத் தலைவா் என்.ஜே.போஸ் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் 560-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் உள்ளன. இந்தப் படகுகளுக்கு தமிழக அரசு சாா்பில், 19 ஆயிரம் லிட்டா் டீசல் மானிய விலையில் வழங்கப்படுகிறது. மீன் பிடிக்கச் சென்றால் மட்டுமே மானிய டீசல் வழங்கப்படும். மீன்பிடிக்கச் செல்லாத நேரத்தில் அதிகாரிகள் உதவியுடன் வெளி பகுதி துறைமுகங்களில் உள்ள படகு உரிமையாளா்களுக்கு மானிய டீசல் சட்டவிரோதமாக விற்கப்படுகிறது.

மீன் வளத் துறை அதிகாரிகள் அலட்சியத்தால் மாதந்தோறும் பல லட்சம் ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்படுகிறது. இதைத் தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.