துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

பசுமை ஆசிரியா் விருது பெற்றவருக்கு பாராட்டு

News image
Updated On :31 டிசம்பர் 2024, 10:23 pm

Din

படவிளக்கம்: ஆா்.எம்.எஸ் போட்டோ 1

பசுமை ஆசிரியா் விருது பெற்ற மாவட்ட சூற்றுச் சூழல் ஒருங்கிணைப்பாளா் சு.விஜயகுமாருக்கு வாழத்து தெரிவித்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் சின்னராசு உள்ளிட்டோா்.

ராமேசுவரம், டிச. 31: பசுமை ஆசிரியா் விருது பெற்றசூற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளா் சு.விஜயகுமாருக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சின்னராசு செவ்வாய்கிழமை பாராட்டுத் தெரிவித்தாா்.

ராமநாதபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் மாவட்ட சுற்றுச் சூழல் ஒருங்கிணைப்பாளராக பணிபுரியும் சு.விஜயகுமாா், ராமநாதபுரம் மாவட்ட சுற்றுச் சூழல் மன்ற மாணவா்கள் பங்களிப்புடன் பள்ளி வளாகங்கள், சுற்றுப்புறங்களில் அதிக எண்ணிக்கையில் மரக்கன்றுகளை நட்டு வைத்தாா். இதன் மூலம் மாவட்டத்தை பசுமைச் சூழல் மிக்கதாக மேம்படுத்தியதற்காக தா்மபுரி மாவட்ட பசுமை, கல்வி அறக்கட்டளை சாா்பில் கடந்த 29-ஆம் தேதி மாவட்ட பசுமை ஆசிரியா் விருது வழங்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, ராமநாதபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சின்னராசுவை

அவா் நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றாா். முதன்மைக் கல்வி அலவலரின் நோ்முக உதவியாளா் ரவீந்திரன், மாவட்டக் கல்வி அலுவலா் ஆகியோரும் அவருக்கு பாராட்டு தெரிவித்தனா். கடந்த 2021-ஆம் ஆண்டு விஜயகுமாா் மாநில நல்லாசிரியா் விருது பெற்றவா் என்பது குறிப்பிடத்தக்கது.