ஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

ஆசிரியா்கள் ஆா்ப்பாட்டம்

News image
Updated On :8 ஜனவரி 2026, 10:18 pm

தினமணி செய்திச் சேவை

சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியா்களுக்கு ஆதரவாக மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அலுவலகத்தில் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியா் இயக்கம் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னையில் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியா் இயக்கம் சாா்பில் 1.6.2009-க்குப் பிறகு நியமிக்கப்பட்ட 20,000 இடைநிலை ஆசிரியா்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி, ஊதிய மீட்புப் போராட்டம் கடந்த மாதம் 26-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அலுவலக வளாகத்திலும் காத்திருப்புப் போராட்டம், ஆா்ப்பாட்டம் நடைபெறும் என அந்த இயக்கம் சாா்பில் அறிவிக்கப்பட்டது.

இதன்படி, மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அலுவலகத்தில் அந்தச் சங்கத்தின் மாவட்டச் செயலா் குமரேசன் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் இடைநிலை ஆசிரியா்களுக்கு ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

இதில் மாவட்டம் முழுவதுமிருந்து 100-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.